Monday, January 4, 2016

நீதிமன்றத்தால் குற்றவாளி என குறிப்பிடப்பட்டவர்களின் பெயர் மட்டுமே "Name and Shame பட்டியலில் இடம் பெறும்

ஒருவரின் குற்றம் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டு,  அவர் குற்றவாளி என  தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே குறிப்பிட்ட ஒருவரின் பெயர் Name and Shame பட்டியலில் இடம் பெறும்.

அதனை விடுத்து,  ஒருவர் மீதான குற்றச்சாட்டு பெறபட்ட பின்னரோ அல்லது அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கும் போதோ அவரது பெயரை அந்த பட்டியலில் இணைப்பது சரியாகாது.

ஏனெனில் இன்னும் அந்த நபர் மீதான குற்றச்சாட்டு முடிவுக்கு வராத ஒரு நிலையில் அவரது பெயர் அந்த பட்டியலில் இடம் பெறுவது நியாயமான ஒரு செயலாக அமையாது.

முன்னதாக கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் அவரது சமூக வளைத்தளத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - கின் பெயர்  Name and Shame பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இருப்பினும் நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவித்தப் பின்னரே அவ்வாறு செய்ய இயலும் என்பது சட்டத்திற்கு உட்பட்ட உண்மை.




No comments:

Post a Comment