Thursday, January 21, 2016

பாக்சைட் விவகாரத்தில் பெரிய புள்ளிகளுக்கும் சம்பந்தம் உள்ளதா?

பாக்சைட் சுரங்க நடவடிக்கைத் தொடர்பான விசாரணைகளில் இருந்து எந்த  தரப்பினரும் தப்பி விட முடியாது.

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாக்சைட் விவகாரத்தில் பாகுபாடற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குவாந்தான் பாகாங்கில், பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்திய பாக்சைட் சுரங்க நடவடிக்கைகளில்  உயர் பதவிகளை வகித்து வருபவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அஸாம் தெரிவித்தார்.

இதனிடையே பாக்சைட் விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதா சில தரப்பினர் கூறும் கருத்துகள் உண்மையற்றது என அவர் சொன்னார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைத் தொடர்பான சரியான தகவல்களை திரட்டுவதில் தமது தரப்பு பல சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்து வரும் போதிலும் இதில் முற்றாக சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரம் ஏதும் மக்கள் வழங்க தவறியது மிகப் பெரிய சவாலாக அமைவதாக அவர் கூறினார்.

இதனிடையே  இந்த பக்சைட் விவகாரம் தொடர்பாக மாநில நில மற்றும் கணிமவள அலுவலகத்திலிருந்து நால்வர் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக அஸாம் தெரிவித்தார்.








No comments:

Post a Comment