Thursday, January 21, 2016

நான் பதவி விலக போவதில்லை - டான் ஶ்ரீ அபு காசிம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது அந்த பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மற்றுமொருவர் அவருக்கு பதிலாக அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் சமூக வளைத்தல தகவல் ஊடகங்களிள் வெளி வந்துள்ள செய்திகள் தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தமது தரப்பு பெறவில்லை என எம்.ஏ.சி.சி தெரிவித்துள்ளது.

முன்னதாக அபு காசிம் உடல் நலக் குறைவினால் அவரது பதவியிலிருந்து  மாற்றப்பட உள்ளதாக வதந்தியான செய்தி வெளிவந்தது.

அதற்கு பதிலளிக்கும் வண்ணம் அவர் தமது பதவி காலம் முடியும் வரையில் தொடர்ந்து அவ்வாணையத்திற்காக சேவையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது நாட்டின் மிக பெரிய ஊழல் வழக்குகளை எம்.ஏ.சி.சி விசாரித்து வரும் இவ்வேளையில் அதன் உயர் ஆணையர் பதவி விலக வேண்டும் என நெருக்குதல்கள் வலுத்து வருவதாக எழுந்துள்ள ஆரூடங்களுக்கும் அபு காசிம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"தற்போது என்னை பதவி விலக கோரி எந்த வித நெருக்குதல்களும்  பெறப்படவில்லை, நானும் என் பதவி காலம் முடியும் வரை பதவி விலக போவதும் இல்லை. எல்லாவற்றையும் விட நான் வகித்திருக்கும் பொறுப்பு தான் மிக முக்கியம். "

தொடர்ந்து தாம் பதவி விலகவோ அல்லது ஓய்வு பெறவோ விண்ணப்பிக்கவில்லை. ஆனால் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது ஒட்டியும் தமக்கு தெரியாது என அவர் கூறினார்.

தாம் அரோக்கியமாக இருக்கும் வரையில் எம்.ஏ.சி.சி- க்கு தொடர்ந்து தலைமை ஏற்க போவதாகவும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment