மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வானொலி எம்.ஏ.சி.சி எப் எம் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே செயல் பட தொடங்கி விட்டது அனைவரும் அறிந்ததே.
மாலாய்,
ஆங்கிலம், சீன மொழி மற்றும் தமிழ் மொழி என நான்கு மொழிகளும் ஊழல் குறித்த தகவல்களோடு இந்த அலைவரிசை தினமும் ஒலிபரப்பாகிறது.
சிறந்த
பாடல்கள், இடையிடையே நல்ல பல தகவல்கள், ஊழல் குறித்த
விழிப்புணர்வு
அம்சங்கள், ஊழல் தடுப்பு அதிகாரிகளின் நேர்கானல்கள் என பல அற்புதமான விஷயங்களை தாங்கி மலர்கிறது எம்.ஏ.சி.சி எப் எம் மின் நிகழ்ச்சிகள்.
இதில்
குறிப்பாக தமிழ் நேர ஒழிபரப்பு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்திய அதிகாரிகளை மகிழ்விப்பதோடு பொது மக்களுக்கும் மிகப் பெரிய பயன்களை கொண்டு வரும் என்பதே ஊழல் தடுப்பு ஆணையத்தின் நம்பிக்கை.
வரக்கூடிய
காலங்களில் ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணி புரியும் இந்திய அதிகாரிகள் உடனான நேர்கானல்களும் இதில் இடம் பெறவிருப்பது தமிழ் நேர ஒலிபரப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஊழல்
எதிர்ப்பு துறையில் அவர்கள் கடந்து வந்த அனுபவங்கள், இத்துறையில் அவ்வதிகாரிகள் கற்று கொண்ட விஷயங்கள் என பல புதிய விஷயங்களையும் மக்களோடு பகிர்ந்து கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment