2015 ஆம் ஆண்டு
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வியூக தொடர்பு குழுவுக்கு முழுவதுமாய் ஒரு
சவால்மிக்க ஆண்டாக அமைந்ததாக அதன் தலைவர் டத்தோ ரோஹைசாட் யாக்கோப் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முழுவதும் வெவ்வேறு
நிலைகளில் ஏற்பட்ட பல்வேறு சவால்களை தமது குழு எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, எஸ்.ஆர்.சி இன்டர்நேஷினல்,
260 கோடி ரிங்கிட் விவகாரம், ஆணையத்தின் உயர்
ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது உடல் நலம் குறைவின்றி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டது, எம்.ஏ.சி.சி யின் இரு இயக்குனர்களின் பதவி மாற்றம், அனைத்துலக ஊழல் தடுப்பு
மாநாட்டின் ஏற்பாடுகள், கேமரன் மலையில் சட்ட விரோத
நடவடிக்கைகள் என்பவை சந்தித்த சவால்களுல் அடங்கும் என்றார் அவர்.
2015 ஆம் ஆண்டு
எழுந்த பல சவால் மிக்க விவகாரங்களை தமது தரப்பு மிகச் சிறப்பாக கையாண்டதாக அவர்
தெரிவித்தார்.
எம்.ஏ.சி.சி யில் மிக அண்மையில்
துவங்கப்பட்ட ஒரு குழுவான போதிலும் கடந்த ஆண்டு முழுவதிலும் ஏற்பட்ட மிக பெரிய
சவால்களை மிகச் சாமர்த்தியமாக தமது குழு கடந்து வந்து விட்டதாக அவர்
குறிப்பிட்டார்.
சமீபத்தில் எம்.ஏ.சி.சி யின் அதிகாரப்பூர்வ
வானொலியான எம்.ஏ.சி.சி எஃப்.எம் மிற்கு வழங்கிய சிறப்பு நேர்கானலின்
போது அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment