Wednesday, August 5, 2015

சட்ட துறை தலைவர் இனியும் மௌனம் காக்க தேவையில்லை!


என்ன தான் நடக்குது இந்த 1 எம்.டி.பி விவகாரத்துலே? நாட்டின் உயர் அந்தஸ்த்து கொண்ட தலைவரோட வங்கி கணக்குலே 260 கோடி வெள்ளி போடப்பட்டிருக்குன்னு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த 3 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலே சொல்லிட்டாங்கே….

ஆனால் அது 1 எம்.டி.பி பணம் இல்ல… தேர்தல் பிரச்சாரத்துக்காக நன்கொடையா வந்த பணம்ன்னு சொல்லியாச்சு…. ஆனா நன்கொடை கொடுத்தது யாருன்னு சொல்லல....

ஊழல் தடுப்பு ஆணையத்தோட அதிகாரம் எவ்வளவு தூரம் இருக்கோ அதுக்கு உட்பட்ட விசாரணையும் நடத்தப்பட்டாச்சு, வங்கி கணக்கில இருக்கிற பணத்தைப் பத்தியும் அது நன்கொடையா வந்ததுன்னும் தெரிவிச்சாச்சு….

இதுக்கு மேலே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியது யாரு? ஏதோ என்னோட அறிவுக்கு எட்டினத நான் சொல்லிடறேன்…… 

ஒரு பணிக்குழு ஒன்னு அமைச்சாங்கலே, 1 எம்.டி.பி பற்றிய விசாரணை நடத்த…. அதுல முதன்மை வகிக்கிற ஒரு அமைப்பு தான் கண்டிப்பா இதுக்கு பொறுப்பேற்கனும்.

நம்ம நாட்டில சட்டம் தொடர்பான பிரச்சனைகள் வரும் போதும், இல்ல எதேனும் பிரச்சனைகள் உச்ச கட்டத்தை எட்டும் போதும், சட்ட துறை தலைவரையும் அவர் சார்ந்த மற்ற சட்ட நிபுணர்களையும் அனுகுறது தானே இத்தனை நாள் வழக்கமா இருந்து வந்துச்சு… 

அப்போ இதுவும் கண்டிப்பா அவரோட கவனத்துக்கு கொண்டு செல்லப்படுறது தானே நியாயம்….

அந்த நிதியை நன்கொடையா கொடுத்த தர்ம பிரபு அல்லது பிரபுக்கள் யாருன்னு கண்டுபிடிக்கிறதுல்ல இருந்து, எதுக்காக இவ்வளோ பெரிய தொகை நன்கொடையா கொடுக்கப்பட்டது அப்படின்ற வரைக்கும் இனி சட்ட துறை தலைவர் தான் விசாரிக்கனும்.

இதுக்கு முன்னl, 1 எம்.டி.பி கீழே இருந்து வந்த எஸ்.ஆர்.சி இன்டர்நேஷினல் மேலே உள்ள விசாரணையும் எம்.ஏ.சி.சி இன்னும் முழுசா முடிக்கல. 

அந்த நாப்பது கோடி வெள்ளி தொடர்பான விசாரணையும் இன்னும் நடந்துகிட்டு தானே இருக்கு….

இப்படி இருக்கையிலே ஆத்துல ஒரு காலுன்னும், சேத்துல ஒரு காலுன்னும் எப்படிதான் இந்த எம்.ஏ.சி.சி யினாலே வைக்க முடியும்?

இன்னோரு விஷயத்தையும் நான் சொல்லிடறேன்......

இந்த 260 கோடி வெள்ளி முழுசா நன்கொடை பணம் தான் என்கிற விஷயத்தையும் சட்ட துறை தலைவரிடத்தில எம்.ஏ.சி.சி சொல்லிட்டாங்களாம்!

என்னோட வேலையை நான் பக்குவமா முடிச்சிட்டேன், இனி விசாரணை உங்க கையில என்கிற மாதிரி எம்.ஏ.சி.சி தன்னோட விசாரணை தொடர்பான அறிக்கையையயும் வெளியிட்டுடாங்க….

அப்புறம் என்னங்க? சட்ட துறை தலைவர் தன்னோட பொறுப்பை ஆரம்பிச்சிற வேண்டியது தானே…..

எவ்வளவுக்கு எவ்வளவு விசாரணை விரசலா முடியுதோ; அவ்வளவும் எல்லாருக்கும் நல்லச் செய்தி தானேப்பா….


அப்புறம் எதுக்கு விசாரணையைத் தள்ளிப் போட்டுகிட்டு…. சட்டு புட்டுன்னு ஆரம்பிங்கப்பா….

No comments:

Post a Comment